
சின்ன திரையில் வளம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா படத்திலும் நடித்தார். இவர் கடைசியாக கடந்த ஜூலை 1ஆம் தேதி வெளியான யானை படத்தில் ஜெபமலர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் என் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம்,திருச்சிற்றம்பலம் மற்றும் 10 தல உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன. இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருவார்.
இதனிடையே ராஜவேல் என்ற நபரை பிரியா பவானி சங்கர் காதலித்து வருவதை பலரும் அறிந்திருப்போம். அவர் அவ்வப்போது தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வாடிக்கையாகக் கொண்டவர். இந்நிலையில் தனது காதலருடன் வெளிநாட்டிற்கு டூர் சென்றுள்ள பிரியா பவானி சங்கர் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக காதலருடன் ஊர் சுற்றி வருகிறார்.
தற்போது இவர் ஜெர்மனியில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் காதலருடன் வெளிநாடே கதியா இருக்கீங்களே, இந்தியா வர மனசே இல்லையா? என்று இணையத்தில் கலாய்த்து புகைப்படத்தை ஷேர் செய்து வருகிறார்கள்.
Leave a Reply