
தமிழ் சினிமாவில் 80கள் முதல் இன்றுவரை ஆதிக்கம் செலுத்திவரும் பல நடிகர்கள் உள்ளனர். இயக்கமும் செய்துகொண்டு நடிப்பிலும் கவனம் செலுத்தும் ஒருசில நடிகர்களில் ஒருவர் ஆர் சுந்தர்ராஜன். பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான “பயணங்கள் முடிவதில்லை” 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார். பின்னர் வைதேகி காத்திருந்தாள்,பாடு நிலவே போன்ற பல படங்களில் இயக்குனராக இருந்துள்ளார்.மேலும் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.கடைசியாக தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் நடித்தார்.
நீண்ட காலமாக திரையில் தோன்றாத இவரை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர் , தற்போது இவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த அவரது ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர் ,இதோ அவர்களின் புகைப்படம் உங்களுக்காக .,