
தமிழ் சினிமாவில் 80 களில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேவதி. இவர் மண்வாசனை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். தன் முதல் படத்திலேயே மக்களுக்கு பிடித்த நடிகையாக மாறிவிட்டார். அதையடுத்து அவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவரை மேலும் உச்சிக்கு கொண்டு சென்ற திரைப்படம் மௌனராகம் மற்றும் தேவர்மகன். இதில் நடித்த நடிகை ரேவதியை தேவர்மகன் ரேவதி என்று பல இடங்களிலும் புகழப்பட்டார்.
வைதேகி காத்திருந்தாள், கிழக்கு வாசல் , மகளிர் மட்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மகளிர் மட்டும் திரைப்படத்தில் சிறப்பாக நடித்து மக்களை தன் பக்கம் இழுத்தார். இவர் தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமில்லாமல் இயக்குனராகவும், டப்பிங் பேசக் கூடியவராகவும் இருக்கிறார். இவர் தன் சிறப்பான நடிப்பிற்கு பல விருதுகளை வாங்கியுள்ளார். அதை அடுத்து தற்போது குலேபகாவலி , ஜாக்பாட் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதிகமாக ரசிகர்களை கவர்ந்தார்.
நடிகை ரேவதி பல சாதனையை பெற்றாலும் திருமண வாழ்க்கையில் சறுக்கலை சந்தித்தார். இவர் 1986 ஆம் ஆண்டு சுரேஷ் சந்திரமேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் நடிகை ரேவதிக்கு சில வருடம் முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தையை தத்தெடுத்ததாக செய்தி பரவி வந்த நிலையில் அதை பற்றி அவர் பேசியுள்ளார்.
அதில் நான் டெஸ்ட் டியூப் மூலமாக என் மகள் மகியை பெற்றெடுத்தேன் என்றார். அந்த குழந்தையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்…