“எனக்கு வயசு 37 தான்”…. என்னை யாராவது அப்படி கூப்பிட்டா போலீசில் புகார் அளிப்பேன்…. பிரபல நடிகை திடீர் எச்சரிக்கை…

தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரபலமானவர்தான் நடிகை அனுசுயா பாரத்வாஜ் . இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் முதலாக மீடியா துறையில் அறிமுகமானார். வேதம் மற்றும் பைசா ஆகிய திரைப்படங்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது புஷ்பா 2 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் விஜய் தேவரகொண்டான் நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் பல்வேறு நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் நடிகை அனுஷியா அந்த திரைப்படம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதனால் அனுசுயா போட்ட ட்விட்டர் பதிவு வைரலானதை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் பலரும் அதனை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் அவரை ட்விட்டரில் ஆண்ட என அழைக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் அனுசுயாவை துன்புறுத்தும் அளவிற்கு நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்துள்ளனர். இருந்தாலும் அவர்களை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து வந்த அனுசியா ஒரு கட்டத்தில் அதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தன்னை ஆன்ட்டி என அழைக்கும் பலருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில்,இதற்கு மேலும் எனது வயதை காரணம் காட்டி ஆன்ட்டி என அழைத்தால் அல்லது அசிங்கமாக விமர்சனம் செய்தால், என் குடும்பத்தை இழுத்தால் அவர்களுடைய அக்கவுண்ட் ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்து போலீசில் புகார் அளித்து விடுவேன். ஒரு காரணமும் இல்லாமல் என்னை விமர்சனம் செய்வதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். 25 வயதுக்கு மேற்பட்டவர்களை எப்படி ஆன்ட்டி என அழைக்கலாம்.