“தி லெஜண்ட்”…. முதல் படத்திலேயே இத்தனை கோடி நஷ்டமா?…. கையை பிசையும் அருள் சரவணன்….. அடுத்த பிளான் என்ன….?????

சரவணா ஸ்டோர் தொழிலதிபரான அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஜூலை மாதம் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 திரையரங்குகளில் வெளியானது.அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார். மேலும் அவரின் காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடித்திருந்தார்.
ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள தி லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவானது. இந்தத் திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை விநியோகம் செய்த கோபுரம் சினிமாஸ் அன்பு செழியன் இந்த படத்தை அதிக முன் பணம் கொடுத்து தமிழக முழுவதும் வெளியிட்டது.
இவ்வளவு பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம்கிட்டத்தட்ட 46 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இதுவரை 6 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. படத்தின் ஓடிடி உரிமை அமேசான் நிறுவனத்திற்கு 3 கோடிக்கு விற்கப்படுவதாக பேசப்பட்ட நிலையில் அந்நிறுவனமும் பின்வாங்கி விட்டது. 30 லட்சம் மட்டுமே தருவோம்,அதுவும் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து முடிவு செய்வோம் என்று அமேசான் நிறுவனம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறார் அருள் சரவணன்.மேலும் முதல் படத்தில் தோல்வியை சந்தித்தாலும் அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்போடு தனது அடுத்த படத்திற்கான கதையை கேட்டு வருவதாகவும் அப்படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.