வளர்ந்து ஹீரோ போல இருக்கும் நடிகை சிம்ரனின் மகன்கள்… இணையத்தில் வெளியான போட்டோ…

‘ஒன்ஸ்மோர்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார் நடிகை சிம்ரன். 90 களில் தமிழ் திரைப்படங்களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். கோவில்பட்டி வீரலட்சுமி, துள்ளாத மனமும் துள்ளும் படங்கள் இவருக்கு பல விருதுகளை வாங்கி தந்தன .
தனது சிறு வயது நண்பரான தீபக் பாகாவை திருமணம் செய்து கொண்டார். நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி, அவள் வருவாளா, பிரியமானவளே, உன்னைக் கொடு என்னைத் தருவேன், பார்த்தேன் ரசித்தேன், பஞ்சதந்திரம், கன்னத்தில் முத்தமிட்டால் ,வாரணம் ஆயிரம் ,உதயா இவர் நடிப்பில் வெளி வந்த ஹிட் திரைப்படங்கள்.
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார் . திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்த இவர் தற்பொழுது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் நடிகை சிம்ரன் அவர்கள், தனது இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா மற்றும், இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.