சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து காரணம் இதுதான்…. உண்மையை பட்டென போட்டுடைத்த பாடகி சின்மயி…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் பூ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர். அது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவர்கள் விவாகரத்திற்கான காரணத்தை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும் காபி வித் கரன் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது சமந்தா, இருவருக்கும் இடையே பெரிய மனக்காசப்பை இருப்பதை மறைமுகமாக கூறினார். ஆனால் நாக சைதன்யா தனது முன்னாள் மனைவி சமந்தாவை பற்றி எந்த ஒரு பேட்டியிலும் தவறாக பேசவில்லை.
இந்நிலையில் சமந்தாவின் விவாகரத்து தொடர்பான உண்மையை பாடகி சின்மயி போட்டுடைத்துள்ளார். இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டியில், பொதுவாக கணவனை விட பெண் அதிகமாக சம்பாதித்தால் அவரின் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு வயிற்று எரிச்சல் வருகின்றது. அதனால் பெண்ணுக்கு மன நிம்மதியும் கிடைப்பதில்லை.நம்முடைய இந்திய கலாச்சாரம் அப்படித்தான் இருக்கிறது.
அதையெல்லாம் தாண்டி வரும் அளவுக்கு சமந்தாவுக்கு இருந்த தைரியம் எல்லோருக்கும் இருக்க வேண்டும். சமந்தா பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என அனைத்திலும் நடித்து ஆஸ்கார் வாங்க வேண்டும் என்று சின்மயி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.