சூர்யா மற்றும் ஜோதிகா ஆகிய இருவரும் தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகிறார்கள். இருவருமே திரையுலகில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு தேவ் மற்றும் தியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஜோதிகா மற்றும் அவரது குழந்தைகள் தெரு நாய்க்குட்டி ஒன்றை தத்தெடுத்துள்ளனர்.
மேலும் அந்த நாய்க்குட்டிக்கு பெயர் சூட்டி அதனை கையில் வைத்து கொஞ்சும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிரபலங்கள் பலரும் லட்ச ரூபாய் போட்டு வெளிநாட்டு நாய்களை வாங்கி வரும் நிலையில் தெருநாயை தத்தெடுத்துள்ள இவர்களின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
மேலும் அந்த நாய்க்குட்டியுடன் ஜோதிகா, அவரது குழந்தைகள் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.